img Leseprobe Leseprobe

தீயாய் வந்த தென்றல்...

ஆர்.மகேஸ்வரி

EPUB
ca. 1,38
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pocket Books img Link Publisher

Belletristik/Erzählende Literatur

Beschreibung

சிறிய கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது.
“ஐயோ... ரத்தம் ஆறாய் போகுதே! பிடியுங்க... இறுக்கிப் பிடியுங்க...!” பதற்றத்தோடு கூறிய கவுதம், அவள் அருகே சென்று, காயத்தைப் பிடிக்கப் போக... அவன் கையை கோபமாக தட்டி விட்டாள்.
“தொடாதீங்க... தொட்டால் நடக்கிறதே வேறு! நான் பொல்லாதவளா ஆயிடுவேன்!”
“முதல்ல ரத்தத்தை நிறுத்தணும்... ஏராளமா ரத்தம் வீணாகுதே!” என்றவன், தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு... கைக்குட்டை எடுத்து உதறி கட்டுப் போடப் பார்த்தான்.
அவள் பின்னே நகர்ந்தாள்.
“போங்க... போயிடுங்க! என்னைப் பற்றிக் கவலைப்பட நீங்க யார்?”
“சாரி... சாரிம்மா... நீங்க திடீர்னு வந்ததை நான் கவனிக்கலே! வேணும்னு உங்களை விழ வைக்கல. தெரியாமல் நடந்துடிச்சி! வாங்க, ஆஸ்பத்திரிக்கு போகலாம்... என் கார் அங்கே நிற்குது. கொண்டு வரேன்!”
“ஆஸ்பத்திரிக்குத்தானே? எனக்கு போய்க்க தெரியும்! நீங்க உங்க வேலையைப் பாருங்க!’’
கவுதம் புரியாமல் விழிக்க...
“பெண்களை துரத்தும் உங்க வேலையைத்தான் சொன்னேன்!”
பிரியா நக்கலாய் பேசினாள். கவுதமுக்கு அவமானமாக இருந்தது.
“என்னைத் தப்பா புரிஞ்சிட்டீங்க!”
“சரியாத்தான் புரிஞ்சிருக்கேன்!“அவள் என் மாமா பெண். அவளுக்கு சுடிதார் வாங்க வந்தேன். எனக்கு எதுவும் பிடிக்கலே! அவள் போவதைப் பார்த்ததும், அவளையே அழைச்சிட்டு வந்து... அவளுக்குப் பிடிச்சதா வாங்கலாம்னு ஓடி வந்ததில்... தெரியாமல் மோதிட்டேன். சாரி... வெரி சாரி... முதல்ல வாங்க... பேச நேரமில்லை!” அவன் அவசரப்படுத்த...
“எனக்குப் போகத் தெரியும்!”
“வீம்பு பிடிக்காதீங்க! சொன்னா கேளுங்க!”
“ஆட்டோ... ஆட்டோ...” என்று கைதட்டி அழைத்து... அதில் ஏறிப் போனாள் பிரியா. இறக்கையை இழந்த வண்ணத்துப் பூச்சியாய் வலியில் துடித்தாள்.
கவுதம் மனம் பதைபதைத்தது. ‘எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என்று விட்டுப் போக மனமில்லாமல்... காரில் ஆட்டோவைப் பின்தொடர்ந்தான்.
ஆஸ்பத்திரியில் காயங்களுக்கு தையல் போடப்பட்டது...
வராந்தாவில் கையைப் பிசைந்து கொண்டு நின்றான் கவுதம். டாக்டர் வெளியே வர...
“டாக்டர்... காயம் பலமா?”
“ஆமா சார், நாளை வீட்டுக்குப் போகலாம். அவங்க உங்களுக்கு என்ன வேணும்?”
“தெரிந்த பெண்!” என்றான், யோசிக்காமல்.
“நான் பார்க்கலாமா?”
“ஓ.கே!’’ என்று டாக்டர் சென்று விட உள்ளே நுழைந்தான்.
“உங்களை யார் வரச் சொன்னது? எதுக்கு வந்தீங்க?” கோபமாய் கத்தினாள்.
“தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிக்கக் கூடாதா?”
“என்ன தெரியாமல்? அழகான பெண்களைக் கண்டால்... எதிரில் வருபவர்களைத் தெரியாதா?” சீறினாள்.
“தப்பா பேசாதீங்க...“நான் அப்படித்தான் பேசுவேன்!”
“மன்னிக்க முடியாதா... என் செயலை!”
“முடியாது, முதலில் வெளியே போங்க!”
“டாக்டர் உங்களை நாளைக்குப் போகச் சொல்கிறார். உங்க ‘அட்ரஸ்’ சொல்லுங்க.”
அவள் முறைத்தாள். கண்களில் நெருப்பு கனல் வீசியது.
“உங்க அப்பா பெயர் என்ன? உங்கள் வீட்டு போன் நெம்பர் கொடுக்க முடியுமா?”
இந்தக் கேள்வியால் பத்ரகாளி ஆனாள்

Weitere Titel in dieser Kategorie
Cover கற்பூர ஜோதி
ஆர்.சுமதி
Cover சினேகிதனே...
ஆர்.சுமதி
Cover பொன்னாடை
ஆர்.சுமதி
Cover மறவாதே மனமே!
ஆர்.சுமதி

Kundenbewertungen

Schlagwörter

R.Maheswari, contemporary fiction, romance, family stories, kudumba novel, Drama, Theeyaai Vantha Thendral