img Leseprobe Leseprobe

உனக்கே உயிரானேன்

ஆர்.சுமதி

EPUB
ca. 1,38
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pocket Books img Link Publisher

Belletristik/Erzählende Literatur

Beschreibung

யாழினி வீட்டிற்கு வந்ததும் மகிழ்ச்சிப் பெருக்கிலும் ஒரு விதப் படபடப்பிலும் மிதி வண்டியை நிறுத்தி இறங்கினாள். பூட்டக் கூடத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.
“அம்மா...”
அம்மா துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் உற்சாகமான குரல் கேட்டுத் திரும்பினாள்.
“என்னடி... இன்டர்வியூ நல்லா இருந்ததா? நல்லா பதில் சொன்னியா? வேலை கிடைக்க அறிகுறி ஏதாவது இருந்ததா?” என்றாள்.
வியர்த்துக் கொட்ட நின்றிருந்தாள் யாழினி. அருகே வந்த அம்மா தன் முந்தானையால் அவளுடைய முகத்தைத் துடைத்தாள்.
“அறிகுறி என்னம்மா? வேலையே கிடைச்சாச்சு” என்றாள்.
“என்னடி சொல்றே?”
“உண்மையாத்தாம்மா சொல்றேன். எனக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு.”
“ரொம்ப சந்தோஷமா இருக்குடி. எனக்குத் தெரியும். உனக்குத்தான் இந்த வேலைன்னு. ஆனால்... வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லைடி, ஒரு பொண்ணுக்கு. நல்ல வாழ்க்கை கிடைக்கணும். எவ்வளவோ படிச்சுட்டுப் பெரிய பதவியில இருக்கற பெண்களுக்கு நல்லவாழ்க்கை கிடைக்கலைடி. உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். ஆனா... நான் மனசுல நினைக்கிற மாதிரி உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ எந்தக் கவலையும் இல்லாம இங்க இருக்கற மாதிரியே சந்தோஷமா வாழணும். அதான் என் ஆசை...”
“அம்மா... வேலை கிடைச்சதும் கல்யாணப் பேச்சை எடுத்திட்டியா?காலா காலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை அமையணும். எனக்குக் கிடைச்சமாதிரி ஒரு வாழ்க்கையை இல்லை. மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத ஒரு இடமா உனக்குப் பார்க்கணும்.”
“இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாளைக்கு என்னை சுதந்திரமா இருக்கவிடு.”
கல்யாணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யாழினி சாப்பிட்டு விட்டு எழுந்தாள். நிம்மதியாக சற்று நேரம் படுத்தாள். மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. காலையில் பள்ளிக்கு செல்வதைப் பற்றியே நினைவு சுழன்றது. அந்தப் பள்ளிக்கூடமே நினைவிற்கு வந்தது. சுகமாக இருந்தது அந்த நினைவு.
அப்படியே கண்கள் சொருக உறங்கினாள். பள்ளிக்கூடம் செல்வதைப் போலவும் பாடம் எடுப்பதைப் போலவும் பகல் கனவு வந்தது. கூடவே அவளுடன் பேசிய அந்த இளைஞனின் முகமும் அவனுடன் ஏதேதோ பேசுவதைப்போலவும் காட்சிகள் வந்தன.
விழித்தபோது மணி மாலை நான்கு. எழுந்து குளியலறைக்குள் சென்று சந்தன சோப்பில் முகம் கழுவி வாசனையாக வந்தாள்.
அம்மா, சூடாக காபியும் பஜ்ஜியும் தந்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு முகத்தில் பவுடர் போட்டு பொட்டு வைத்த போது எதிர்வீட்டுக்கார அம்மாவின் மகள் வந்தாள். அவள் கல்லூரியில் படிப்பவள்.
“அக்கா... வாழ்த்துக்கள்.. வேலை கிடைச்சிருக்காம். அம்மா சொன்னாங்க” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
“வா... ராணி... உட்கார்.” தனக்கு வேலை கிடைத்த பள்ளியின் பெயரைச் சொன்னாள்.
“நல்ல ஸ்கூல்க்கா” என்ற ராணி, “அக்கா... கோவிலுக்கு வர்றியா? போயிட்டு வருவோம்” என்றாள்.
“கோவிலுக்கா?” யோசனையாய் முகத்தில் அதிகப்படியாய் இருந்த பவுடரைத் துடைத்தாள் யாழினி.
“போ போயிட்டு வாயேன்டி. வேலை வேற கிடைச்சிருக்கு. அம்பாளுக்கு உன் பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா” என்றாள் அம்மா.யாழினிக்கும் எங்காவது வெளியே சென்றால் தேவலாம் போலிருந்தது.
“சரி வர்றேன்” என்றாள்.
பூஜைக் கூடையுடன் சேலை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். இரண்டு தெரு தாண்டி ஒதுக்குப் புறமாய் அமைதியாய் இருந்த அம்மன் கோவிலுக்கு இருவரும் வந்தனர்.
உள்ளே நுழையும் போதே கவனித்தாள் யாழினி. தீபன் ஒரு தூணோரம் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்

Weitere Titel von diesem Autor
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
Weitere Titel in dieser Kategorie
Cover கற்பூர ஜோதி
ஆர்.சுமதி
Cover சினேகிதனே...
ஆர்.சுமதி
Cover மறவாதே மனமே!
ஆர்.சுமதி
Cover பொன்னாடை
ஆர்.சுமதி
Cover பாச மலர்கள்
ஆர்.சுமதி

Kundenbewertungen

Schlagwörter

family stories, contemporary fiction, relationship, romance, drama, Kudumba Novel, R.Sumathi