img Leseprobe Leseprobe

மாயத் தோற்றங்கள்

ஆர்.சுமதி

EPUB
ca. 1,09
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pocket Books img Link Publisher

Belletristik/Erzählende Literatur

Beschreibung

கையில் பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்தாள் லலிதா.
வெங்கட்ராமன் முகத்தில் குழப்பமும் கவலையுமாக இரு கைகளையும் தலையில் கோர்த்து வைத்தபடி படுத்திருந்தார்.
கண்கள் மேலே சுழலும் மின்விசிறியோடு சேர்ந்திருந்தது. வழக்கமாகப் படுக்கையில் உறக்கம் வரும் வரை கோவி. மணிசேகரனையோ, கல்கியையோ, சாண்டில்யனையோ படித்தபடியேதான் தூக்கத்திற்குத் தூது விடுவார். வரலாற்று நாவல்கள்தான் அவருக்குப் பிடிக்கும்.
இன்று ‘கடல் புறா’ படிக்கப்படாமல் மூடிக் கிடந்தது.
துணுக்குற்றவளாக அவரருகே வந்தாள்.
“இந்தாங்கோ... பால் சாப்பிடுங்கோ!” என்றாள்.
“அப்படி வை!” குரல் மட்டும் வந்தது. கண்கள் அவளைப் பார்க்கவில்லை.
ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பால் கொஞ்சம் கூட சூடு குறையக் கூடாது. உடனே குடித்து விடுவார். இன்றோ ஆறட்டும் என்பதைப் போல் வைக்கச் சொல்கிறார்.
“ஏன்னா... என்னாச்சு? என்னவோ போல இருக்கேள்?” என்றபடி அருகே அமர்ந்தாள்.
“ப்ச்! தலைவலி...”
“தைலம் தேய்ச்சு விடட்டா?”
“வேண்டாம். சரியாப் போயிடும்.”
“முகமே சரியில்லையே... ஏன்னா... ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா?”ஆபீஸ்ல ஒரு பிரச்சனையும் இல்லை. வீட்டுலதான் பிரச்சனை.”
“வீட்டுல பிரச்சனையா? எனக்குத் தெரியாம வீட்டுல என்ன பிரச்சனை வந்துடப் போகுது?”
“உன் பொண்ணை நினைச்சுத்தான் எனக்குக் கவலையா இருக்கு...”
இப்பொழுது தன் ஐம்பது வயது அழகை மிகைப்படுத்திக் காட்டுவதைப் போல் சிரித்தாள் லலிதா.
“அவளுக்கு என்னன்னா குறைச்சல்? நன்னாப் படிச்சிருக்கா! கைநிறையச் சம்பாதிக்கிறா. பார்க்க என்னை அப்படியே உரிச்சு வச்சிருக்கா. மகாலட்சுமியாட்டம் ஜொலிக்கறா. ஜாதகத்தைக் கையில் எடுத்தா வர்றவன் கொத்திக்கிட்டு போயிடுவான்...”
பொங்கிப் பூரித்து முகமெங்கும் பரவிய சிரிப்பு... மனைவியின் முகத்தில் இன்னும் சில நிமிடங்களில் மறையப் போவதை நினைத்து வருத்தப்பட்டவாறே சொன்னார் வெங்கட்ராமன்.
“அவ ஜாதகத்தை வெளியே எடுக்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிட்டாடி.”
முகம் மாறினாள் லலிதா.
“என்ன சொல்றேள்?”
எழுந்து அமர்ந்தார். பேச முயன்றார். முடியவில்லை என்பதைப் போல் செருமினார்.
மேசை மீதிருந்த பாலை எடுத்து மெல்லப் பருகினார். அவர் பருகி முடிக்கும் வரை பொறுக்க முடியாதவளைப் போல் லலிதா பயம் கலந்த பார்வையை அவர் மீது பதித்திருந்தாள்.
காலி டம்ளரை வைத்தவர் விஷயத்தைச் சொல்ல ஏதோ கொஞ்சம் தெம்பு வந்தவரைப் போல் மனைவியைப் பார்த்தார்.
“லலிதா... நந்தினி காதலிக்கிறாளாம்...”
இன்னும் சில நிமிடங்களில் பூகம்பம் உண்டாகும் என்று வானொலியில் செய்தி கேட்டதைப் போல் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
“கடவுளே... என்ன சொல்றேள்?உன் பொண்ணு காதல் பண்றான்னு சொன்னேன்.”
“என்ன பேசறேள்? என்னமோ கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்றாள்னு சொல்ற மாதிரியில்லே சொல்றேள்?”
“இப்பவெல்லாம் காதலும் கம்ப்யூட்டர் கோர்ஸ் மாதிரிதான்டி. மாடர்ன் உலகத்துக்கு கம்ப்யூட்டர் அறிவு இல்லாம எதுவும் பண்ண முடியாது. காதலும் இப்ப அப்படி ஆகிப்போச்சு...”
“யார் சொன்னா? பொறாமை புடிச்ச எவனாவது சொன்னான்னு நம்பிட்டேளா? நம்ம பொண்ணு அப்படியெல்லாம் பண்ணமாட்டா!”
அவளுடைய நம்பிக்கையைப் பார்த்துச் சிரித்தார். “யாரும் சொல்லலைடி!”
“பின்னே... நீங்க கண்ணால பார்த்தேளா? இந்தக் காலத்துல கூடப் படிக்கிற பசங்க கூட... கூட வேலை பார்க்கற பசங்களோட பழகுறது சகஜம்தானே... உங்க பொண்ணை யார் கூடவாவது ஒண்ணாப் பார்த்துட்டு உடனே முடிவு பண்ணிட்டேளா? அவகிட்ட எதையாவது இப்படி ஏடாகூடமா கேட்டு வைக்காதீங்க. நம்மைப் பழம் பஞ்சாங்கம்னு நினைச்சுடப் போறா...”
வாய் விட்டே சிரித்து விட்டார்

Weitere Titel von diesem Autor
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
Weitere Titel in dieser Kategorie
Cover கற்பூர ஜோதி
ஆர்.சுமதி
Cover சினேகிதனே...
ஆர்.சுமதி
Cover மறவாதே மனமே!
ஆர்.சுமதி
Cover பொன்னாடை
ஆர்.சுமதி
Cover பாச மலர்கள்
ஆர்.சுமதி

Kundenbewertungen

Schlagwörter

contemporary fiction, family stories, romance, relationship, R.Sumathi, Kudumba Novel, drama