img Leseprobe Leseprobe

மலரே, மயங்காதே!

ஆர்.சுமதி

EPUB
ca. 1,38
Amazon iTunes Thalia.de Weltbild.de Hugendubel Bücher.de ebook.de kobo Osiander Google Books Barnes&Noble bol.com Legimi yourbook.shop Kulturkaufhaus
* Affiliatelinks/Werbelinks
Hinweis: Affiliatelinks/Werbelinks
Links auf reinlesen.de sind sogenannte Affiliate-Links. Wenn du auf so einen Affiliate-Link klickst und über diesen Link einkaufst, bekommt reinlesen.de von dem betreffenden Online-Shop oder Anbieter eine Provision. Für dich verändert sich der Preis nicht.

Pocket Books img Link Publisher

Belletristik/Erzählende Literatur

Beschreibung

கைகள் இரண்டையும் தாமரை மொட்டாக்கி, நந்தனின் எதிரே குவித்தாள், தமிழ்.
தாமரை மொட்டின் மீது பனித்துளி விழுந்து சிதறியதைப் போல், அவளுடைய கண்ணீர்த் துளி, கையில் விழுந்து சிதறியது.
“நன்றி... எங்க அப்பாவைச் சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாத்திட்டீங்க! உங்களுக்குக் கோடி நன்றி சொன்னாலும் நீங்க செய்த உதவிக்கு ஈடாகாது.”
நந்தன் சற்றே சங்கோஜப்பட்டான்.
‘‘ஐயோ.. என்ன மேடம், நீங்க வேற..! மனிதனுக்கு மனிதன் இந்த உதவி செய்யலைன்னா எப்படி?”
“நீங்க செய்த உதவியைச் சாதாரணமா எடுத்துக்கிறது உங்களுக்குப் பெருந்தன்மையா இருக்கலாம், ஆனா, எனக்கு எங்க அப்பாவைக் காப்பாத்தின தெய்வமா நீங்க தெரியுறீங்க.’’
“இல்லை... எப்போதெல்லாம் பிறருக்கு உதவி செய்ய நேரம் வாய்க்குதோ, அப்போதெல்லாம் உதவி செய்திடணும். அப்பத்தான், மனித வாழ்க்கை நிறைவா இருக்கும்.”
“உங்க செயல் மட்டுமில்லை, பேச்சும் மனதைத் தொடுகிற மாதிரி இருக்கு, மிஸ்டர்...’’
‘‘நந்தன்.’’
அவளுடைய முகத்தில் அப்பா ஏற்படுத்திய கலக்கம் மறைந்து முதன் முறையாக அழகான புன்னகை மலர்ந்தது.
‘‘நந்தன், உங்களுக்குப் பொருத்தமான பெயர்தான். ஆபத்துல துடிக்கிற உயிரைக் காக்கிற பகவானுடைய திருநாமம். அந்தக் கிருஷ்ணனே வந்து எங்க அப்பாவைக் காப்பாத்தின மாதிரி காப்பாத்திட்டீங்க.”ட்டா... விட்டால் இந்த ஆஸ்பத்திரி ஓரமா கோவிலே கட்டி, கையில் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்து நிக்க வச்சுடுவீங்க போலிருக்கே! அப்புறம்... இங்க உள்ள அழகழகான நர்சுகள் எல்லாம் கோபிகை மாதிரி என்னையே சுத்த ஆரம்பிச்சுடுவாங்க.’’
அவன் இப்படிச் சொல்லவும் புன்னகை படர்ந்த அந்த முகம், பூரிப்பில் நிறைந்தது.
“அப்பாவை இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் பார்க்கணும்னு. டாக்டர் சொல்லிட்டார். இனிப் பயம் இல்லைன்னு உறுதி கொடுத்துட்டார். நீங்க ஆபீசிலிருந்து ஓடி வந்திருக்கீங்க. மணி இரண்டாகப் போகுது. சாப்பிடாம இருக்கக் கூடாது. வாங்க, பக்கத்திலேயே ஓட்டல் இருக்கு. சாப்பிடலாம்,’’ என்றான்.
“இல்லைங்க. எனக்குப் பசி இல்லை. அப்பாவைப் பார்த்த பிறகுதான் என்னால் எதுவுமே சாப்பிட முடியும்.’’
‘‘நீங்க சாப்பிடாம இருக்க முடியும். ஆனா, எனக்குப். பயங்கரப் பசி...’’
அவனை அதிர்வாக ஏறிட்டாள்.
‘நீங்க சாப்பிடலையா?’’
‘‘எப்படிங்க சாப்பிட முடியும்? ஒருவர் உயிருக்குப் போராடும் போது பக்கத்தில் இருக்கிறவனுக்குப் பசி எடுக்குமா? இப்போ பயங்கரப் பசி எனக்கு. ஏன்னா... மனசு நிறைவா இருக்கு. நீங்க என்னோடு சாப்பிடலைன்னா பெண் பாவம் என்னைச் சும்மா விடுமா?’’ அவன் சந்தோஷமாகச் சிரித்தான்.
‘‘சாரி... வாங்க!’’ அவனுடைய பேச்சில் இதமாகச் சிரித்த படி அவனுடன் கிளம்பினாள்.
இருவரும் பக்கத்திலிருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். இரண்டு சாப்பாடு சொல்லிவிட்டு வந்தான், நந்தன். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
‘‘நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க மிஸ்டர் நந்தன்?’’
‘‘இந்த மிஸ்டர், சிஸ்டரெல்லாம் எதுக்கு? அழகா நந்தன்னு கூப்பிடுங்க. நந்துன்னு சுருக்கிக் கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். பதிலுக்கு நானும் உங்களை அமுது என்று கூப்பிடுகிறேன்.”
‘‘பசியில் உங்களுக்கு என் பேர் கூட மறந்துடுச்சா? என் பெயர் அமுது இல்லை , தமிழ்!’’ “நான் ஞாபக சக்தியில் யானை மாதிரி. உங்க பேரை மறக்கலை. சரியாத்தான் சொன்னேன்.’’
‘‘என்ன... என் பெயர் அமுது என்றுதானே சொன்னீங்க?’’
‘‘ஆமா! ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாட்டுக் கேட்ட தில்லையா? பாரதிதாசன் பாடல். அதான், தமிழை அமுதாக்கிச் சொன்னேன்.”
அவளை முதலில் புன்னகைக்க வைத்து, பிறகு மலர வைத்தவன், இப்போது பலமாய்ச் சிரிக்கவே வைத்து விட்டான்.
‘‘சிரிக்க வைக்கிற மாதிரி நல்லா பேசுறீங்க!’’ அவள் சலங்கையாகக் குலுங்கினாள்.
சிலர் திரும்பிப் பார்த்தனர்.
“பாருங்க, வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மை! உங்க முகத்துல தெரிஞ்ச கவலை யெல்லாம் நீங்க சிரிக்க ஆரம்பிச்சதும் போன இடமே தெரியலை!” என்றவாறே அவளுடைய முகத்தை ரசித்தான்.
இலையில் சூடாகச் சோறு போட்டு. சாம்பார் ஊற்றி, வகை வகையாகப் பொரியலை வைத்தான், ஓட்டல் பணியாள்.
சாப்பாட்டைப் பிசைந்த நந்தன், ‘‘பாருங்க... நாம உண்மைன்னு நினைக்கிறதெல்லாம் அடுத்த நிமிடமே பொய்யா மாறிடுது!” என்றான்.
“எது?” அவனை ஆவலாகப் பார்த்தாள், அவள்.

Weitere Titel von diesem Autor
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
ஆர்.சுமதி
Weitere Titel in dieser Kategorie
Cover கற்பூர ஜோதி
ஆர்.சுமதி
Cover சினேகிதனே...
ஆர்.சுமதி
Cover மறவாதே மனமே!
ஆர்.சுமதி
Cover பொன்னாடை
ஆர்.சுமதி
Cover பாச மலர்கள்
ஆர்.சுமதி

Kundenbewertungen

Schlagwörter

Kudumba Novel, R.Sumathi, contemporary fiction, relationship, drama, family stories, romance